செய்திகள்

‘‘என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்

சென்னை, ஜன. 19– திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு, “என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நேற்றுநடைபெற்றது. சென்னை மெரினாவில் நடிகை சுஹாசினி மணிரத்தினம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மெரினாவினை தூய்மையாக வைப்பதற்கான “என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்க தொடக்க நிகழ்ச்சியில், இதற்காக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியினை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் […]

Loading

செய்திகள்

மெரினா உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் குப்பைகளை கொட்டிய 241 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம்- அபராதம்

சென்னை, ஜன.19– சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய கடற்கரைப் பகுதிகளில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டிய 241 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 500 – அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சிலுக்கு மார்ச் 30-ந்தேதி தேர்தல்

சென்னை, ஜன.19- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சிலுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் 25 உறுப்பினர்களை மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். அந்த 25 பேரில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்தவகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டதால், உறுப்பினர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில், பார் கவுன்சில் உறுப்பினர் வரதன் […]

Loading

செய்திகள்

ஐகோர்ட்டு விருந்தினர் மாளிகையின் புதிய நிர்வாக அலுவலகம்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திறந்து வைத்தார்

சென்னை, ஜன.19- ஜூடிசியல் அகாடமியில் கோர்ட்டு விருந்தினர் மாளிகைக்கு புதிய நிர்வாக அலுவலக கட்டிடத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தாமரை இல்லத்தில், நீதித்துறை அலுவலகத்துக்காக பல அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடத்துக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.எம்.சுப்பிரமணியம், அனிதா சுமந்த், ஜி.ஜெயச்சந்திரன், […]

Loading

செய்திகள்

இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் 3 ஏகே–47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுப்பு

அமிர்தசரஸ், ஜன. 18– இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் பஞ்சாப் பதான்கோட் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது எல்லைப் பகுதியான நரோட் ஜெய்மால் சிங் அருகே 3 ஏகே–47 துப்பாக்கிகள், 2 கைத் துப்பாக்கிகள், 98 தோட்டாக்கள், வெடிமருந்து உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சோதனையின்போது மாநிலத்தில் சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் கொண்டு […]

Loading

செய்திகள்

தை அமாவாசை: புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்

சென்னை, ஜன. 18– தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரதநாளாகும். அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வந்தாலும், ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை. இந்த நாளில் முன்னோர்களை […]

Loading

செய்திகள்

கிரீன்லாந்து மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: ஐரோப்பிய ஆணைய தலைவர் பேச்சு

நூக், ஜன. 18– கிரீன்லாந்து மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐரோப்பிய ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்து தனக்கு வேண்டும் என டிரம்ப் கூறி வருகிறார். இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு நான் வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டலாக கூறியுள்ளார். இந்த நிலையில் ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வான்டர் லெயன் பேசும்போது, வரி விதிப்புகள் அட்லாண்டிக் பெருங்கடல் நாடுகளின் உறவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், நிலைமையை சீர்குலைய செய்து விடும் ஆபத்தும் உள்ளது. நாங்கள் டென்மார்க் மற்றும் […]

Loading

செய்திகள்

கேரளாவில் இந்திய விளையாட்டு கழக விடுதியில் வீராங்கனைகள் மர்ம மரணம்

திருவனந்தபுரம், ஜன. 18– கேரளாவில் உள்ள இந்திய விளையாட்டு கழக விடுதியில் வீராங்கனைகள் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொல்லம் நகரில் இந்திய விளையாட்டு கழகத்தின் விடுதி ஒன்று உள்ளது. இதில் பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்கி பயிற்சி பெற்றும், போட்டிகளில் பங்கேற்றும் வருகின்றனர். இந்த நிலையில், இந்த விடுதியில் கபடி பயிற்சி பெற்று வந்த சாண்டிரா ஏ (வயது 18) என்ற வீராங்கனை மற்றும் வைஷ்ணவி (வயது 15) என்ற தடகள வீராங்கனை […]

Loading

செய்திகள்

109வது பிறந்த நாள் எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜன.17– அண்ணா தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா சிலைக்கும் எடப்பாடி […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. முதல்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதி மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம்: எடப்பாடி அதிரடி அறிவிப்பு

சென்னை, ஜன.17– அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாக அறிவித்தார். ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் இலவச பஸ் பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்; 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என […]

Loading