செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: முதல் நபராக மோடி வாக்களித்தார்

புதுடெல்லி, செப்.9- நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது, முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ந்தேதி நிறைவு பெற்றதில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் […]

Loading

செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறுத்திவைப்பு

சென்னை, செப். 9– சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தினர்..13 நாள்கள் போராட்டம் தொடர்ந்த […]

Loading

செய்திகள்

தங்கம் விலை ரூ.81 ஆயிரத்தை தாண்டியது: இன்று சவரனுக்கு ரூ.720 உயர்வு

சென்னை, செப். 9– சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்​து, ரூ.81,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்கும் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சமீப காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி சென்று வருகிறது. தொடர்ந்து உயருவதும், பின்னர் ஏதோ ஒரு நாளில் மெல்ல குறைவதுமாக தங்கத்தின் விலை இருந்து […]

Loading

செய்திகள்

கோவையில் அடுத்த மாதம் 9, 10 தேதியில் ‘உலக புத்தொழில் மாநாடு 2025’:

சென்னை, செப்.9– குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு ஸ்டார்ப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அடுத்த மாதம் அக்டோபர் 9 மற்றும் 10–ம் தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு 2025 கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மாநாட்டினை தொடங்கிவைக்க உள்ளார். இந்த மாநாட்டு பணிகள் தொடர்பாக சென்னை, நந்தனம், மெட்ரோ ரயில்வளாகத்தில் உள்ள ஸ்டார்ட்அப் தமிழ்நாடு தலைமை அலுவலத்தில், தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆய்வு கூட்டம் […]

Loading

செய்திகள்

புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு: தவெக தலைவர் விஜய் கண்டனம்

சென்னை, செப். 9– புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டதற்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வருகிற 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். இதற்காக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெறுவதற்காக, கடந்த 6-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் விமான நிலையத்துக்கு […]

Loading

செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவன் கைது

சென்னை, செப். 7– சென்னை மெட்ரோ ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். சென்னை, கடந்த 5-ந்தேதி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு வழியாக செல்லும் மெட்ரோ ரயில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலுக்கு வெடிகுண்டு […]

Loading

செய்திகள்

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

சென்னை, செப்.7– முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச தயாராக உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர். அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கண்டிப்பாக சந்திப்பேன். அவருக்கு […]

Loading

செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுக்கான அனுமதி ரத்து செய்யப்படாதது ஏன்?

சென்னை, செப்.7– ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதன்பின் ராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாவதை தடுக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு ஆணையிடப்பட்டிருப்பதாக தி.மு.க. அரசு அறிவித்து இன்றுடன் 15 நாள்கள் ஆகும் நிலையில் […]

Loading

செய்திகள்

மிகவும் மோசமான வெள்ள பாதிப்பு: 9–ந்தேதி பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி

சண்டிகர், செப்.7– பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் மோடி வரும் 9ம் தேதி செல்கிறார். இது தொடர்பாக பஞ்சாப் மாநில பா.ஜ.க.வின் எக்ஸ் தளப் பக்கத்தில், ”பிரதமர் மோடி 9ம் தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்கு வருகை தரவுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளார்.வெள்ளப் பாதிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வார். பிரதமரின் பஞ்சாப் பயணமானது, பாஜக அரசு எப்போதும் பஞ்சாப் மக்களுடன் இருப்பதை நிரூபிக்கிறது” […]

Loading

செய்திகள்

செங்கடலில் கேபிள் துண்டிப்பு; இந்தியா உள்பட ஆசியாவில் இணைய சேவை பாதிப்பு

நியூயார்க், செப். 7– செங்கடலில் கேபிள் துண்டிக்கப்பட்டதால் இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டை ஒட்டிய செங்கடல் பகுதியில், கடல் வழியே இணையதள சேவைக்காக கேபிள் பதிக்கப்பட்டு உள்ளது. இதன் வழியே பல்வேறு நாடுகளுக்கும் இணையதள இணைப்புக்கான சேவை நடந்து வருகிறது. இந்நிலையில், செங்கடலில் கேபிள் துண்டிக்கப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட ஆசிய பகுதிகள், மேற்காசியாவில் இணைய சேவை இன்று பாதிக்கப்பட்டு உள்ளது. காசா […]

Loading