செய்திகள்

தங்கம் விலை இன்று ரூ.82 ஆயிரத்தை கடந்தது

சென்னை, செப். 16– தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து 240க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது […]

Loading

செய்திகள்

‘தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி டெல்லிக்குச் சென்றது ஏன்?’’ டிடிவி தினகரன் கேள்வி

சென்னை, செப். 16 – ‘‘தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றது ஏன்? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று டிடிவி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நன்றி மறப்பது நன்றன்று என எடப்பாடி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. நன்றியைப் பற்றி யார் பேசுவது? துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத அவர் பேசுகிறார். அண்ணா திமுகவை […]

Loading

செய்திகள்

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி 108–வது பிறந்தநாள்: ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, செப் 16– விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 108–வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘இந்திய நாட்டின் விடுதலைக்குப் போராடிய வீரரும், முன்னாள் அமைச்சரும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக முன்னின்ற சமூகநீதித் தலைவருமான ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணக்கம் செலுத்தினேன்’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

செய்திகள்

ஒரு மாதத்தில் 46 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை, செப்.16– சென்னையில் ஒரு மாதத்தில் 46 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 12 ஆயிரத்து 255 தெருநாய்களுக்கு முழுமையான தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2021 முதல் இதுவரை 1,34,674 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த்தடுப்பூசியும், 71,475 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

அமித்ஷாவை இன்று சந்திக்கும் எடப்பாடி

புதுடெல்லி, செப். 15– மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேசுகிறார். 2026 சட்டமன்ற தோ்தலில் வெற்றி பெற அண்ணா தி.மு.க.விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாள்களுக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும்; இல்லையென்றால் பிரிந்தவர்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்திருந்தார். செங்கோட்டையனின் இந்த செயல்பாட்டை தொடர்ந்து, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளின்படி சங்கத்தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைப்பேன்

இசையமைப்பாளர் இளையராஜா உறுதி சென்னை, செப்.15- சிம்பொனி இசைத்து உலக சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சென்னையில் பாராட்டு விழா நடத்தியது. இந்த விழாவில் சிம்பொனி அரங்கேற்றி அசத்திய இளையராஜா குறைவான நேரத்தில் தனது உரையை பேசி முடித்துவிட்டார். இதுகுறித்து இளையராஜா நேற்று வீடியோ பதிவில் விளக்கம் அளித்திருந்தார். அதன் விவரம் வருமாறு:-– தமிழக அரசு எனக்கு நடத்திய பாராட்டு விழாவில் அதீத மகிழ்ச்சி காரணமாக எனக்கு பேச்சு வரவில்லை. இந்த பாராட்டு விழாவை […]

Loading

செய்திகள்

விடுபட்ட பெண்களுக்கு ஓரிரு மாதங்களில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்: உதயநிதி உறுதி

சென்னை, செப்.15- விடுபட்ட பெண்கள் அனைவருக்கும் ஓரிரு மாதங்களில் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று, 32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர், 4 கிராம் தங்கத்துடன் பீரோ, கட்டில் உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

193 போலீசாருக்கு அண்ணா பதக்கம்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, செப்.15- அண்ணா பிறந்தநாளையொட்டி 193 போலீசாருக்கு பதக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதியான அண்ணா பிறந்த நாளன்று முதலமைச்சரின் […]

Loading

செய்திகள்

எடப்பாடிக்கு ஸ்டாலின் சவால்

10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என்ன? * ரூ.2885 கோடி திட்டங்களுக்கு அடிக்கல், திறப்பு * 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனைப்பட்டா கிருஷ்ணகிரி, செப்.14– கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.2,884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த விழாவில் வாக்குறுதிகள் பற்றி எடப்பாடி […]

Loading

செய்திகள்

நிச்சயமாக பெரம்பலூருக்கு மீண்டும் வருவேன்: விஜய்

சென்னை, செப். 14– பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக வெற்றிக்கழக வலைத்தள பக்கத்தில் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் […]

Loading