செய்திகள்

தங்கம் ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை; வெள்ளி ஒரு கிராம் – ரூ.165

சென்னை, அக்.4– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் 165 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருவதால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று முன்தினம் ஆபரண தங்கம் கிராம் 10,950 ரூபாய்க்கும், சவரன் […]

Loading

செய்திகள்

கடல் மாநாடு: தூத்துக்குடி கடலில் படகில் சென்று சீமான் ஆய்வு

தூத்துக்குடி, அக். 4– நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல் மாநாடு நடத்துவது குறித்து, தூத்துக்குடி மாவட்டம் அமலி நகர் மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடி படகு மூலம் மீனவர்களுடன் கடலுக்குள் சென்று ஆய்வு செய்தார். ஐம்பூதங்கள் இல்லாமல் பூமியில் எந்த உயிரினங்களும் இருக்காது என்று கூறிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி திருத்தணி அருகே ‘மரங்களின் மாநாடு’, அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் ‘மலைகளின் மாநாடு’ஆகியவற்றை […]

Loading

செய்திகள்

ஐகோர்ட் உத்தரவுபடி கரூரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தொடங்கியது

கரூர், அக். 4– கரூர் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழுவினர் இன்று கரூரில் விசாரணையை துவக்கினார்கள். அவர்களிடம் இதுசம்பந்தமாக ஆவணங்களை கரூர் போலீசார் ஒப்படைத்தனர். கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது. இதைத் தொடரந்து சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு

இஸ்லாமாபாத்,அக்.4– பாகிஸ்தான் கராச்சியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:– பாகிஸ்தான் கராச்சியில் இன்று அதிகாலை 1.59 மணியளவில் (இந்திய நேரப்படி) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல இடங்களில் நன்கு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

Loading

செய்திகள்

‘கரூருக்கு விசாரணைக்குழுவை அனுப்பி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது பா.ஜ.க. அரசு’: ஸ்டாலின் விமர்சனம்

ராமநாதபுரம், அக்.3– தமிழ்நாட்டின் நலன்களைப் புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மாநிலங்களே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுகின்ற ஒன்றிய பாஜக-வுடன் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அண்ணா தி.மு.க.-வும் கூட்டணி வைத்துக் கொண்டு அடிமை சாசனம் எழுதி கொடுத்த தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக தாக்கினார். பா.ஜ.க.-வை அண்ணா திமுக ஆதரிப்பதற்கு ஏதாவது கொள்கை அடிப்படை இருக்கிறதா? பொது காரணம் இருக்கிறதா? மக்கள் நலன் அடிப்படை ஏதாவது இருக்கிறதா? […]

Loading

செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு:

சென்னை, அக். 3– மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட் ரிப்’ மருந்து மற்றும் […]

Loading

செய்திகள்

கரூரில் 41 பேர் பலியான சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

மதுரை, அக். 3– கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி எம்எல் ரவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு […]

Loading

செய்திகள்

திருப்போரூர் சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, அக்.3- திருப்போரூர் சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த பெரம்பூர் சக்கரபாணி தோட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 36), அவரது மகள்கள் கார்த்திகா (17), துளசி (16) எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் […]

Loading

செய்திகள்

இந்தியா–சீனா இடையே 26-ந்தேதி முதல் நேரடி விமான சேவை தொடக்கம்

புதுடெல்லி, அக்.3- 5 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு வருகிற 26ந்தேதி முதல் நேரடி விமான போக்குவரத்து தொடங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த சேவைகளை இந்திய மற்றும் சீன விமான நிறுவனங்கள் நேரடியாக வழங்கி வந்தன. மேலும், இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு கிழக்கு லடாக் எல்லைப் […]

Loading

செய்திகள்

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, அக். 3– முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீடுகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பள்ளிகள், விமான நிலையங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள், முக்கியமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடு ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை டிஜிபி அலுவலக காவல்துறை கட்டுப்பாட்டு […]

Loading