செய்திகள்

சபரிமலைக்கு வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடும் பாதுகாப்பில் இன்று ஐயப்பன் தரிசனம்

திருவனந்தபுரம், அக்டோபர் 22 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக கேரளா சென்றுள்ளார். அவர் நேற்று மாலை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். பின்னர் அவர் கவர்னர் மாளிகையில் தங்கியிருந்து ஓய்வெடுத்தார். இன்று காலை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக சபரிமலையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

Loading

செய்திகள்

அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும்: எடப்பாடி ‘தீபாவளி’ வாழ்த்து

சென்னை, அக்.19– நாளை தீபாவளி பண்டியையொட்டி அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில், சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை […]

Loading

செய்திகள்

ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

திண்டிவனம், அக். 19– ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. மேலும் டாக்டர் ராமதாசின் ஆதரவாளரான ஆடுதுறை சேர்மன் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் டாக்டர் ராமதாசிற்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் […]

Loading

செய்திகள்

தீபாவளி பண்டிகை: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

மதுரை, அக். 19– தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள், தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், மதுரை மலர் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2000க்கு விற்பனை; பிச்சி ரூ.1800, முல்லை ரூ.1700க்கு விற்பனை. கனகாம்பரம் ரூ.1500, ரோஸ் ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.250,காத்திருக்கும் […]

Loading

செய்திகள்

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்; 2 மகன்களை கழுத்தை நெரித்து கொன்று தந்தை தற்கொலை

தூத்துக்குடி, அக். 19– ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த என்ஜினீயர் தனது 2 மகன்களின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபூபதி (வயது 45). என்ஜினீயர். இவருடைய மனைவி பார்வதி (38). இவர்களுக்கு நரேந்திர பூபதி (14), லதீஷ் பூபதி (12) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். சிவபூபதி தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குறிஞ்சி நகர் […]

Loading

செய்திகள்

நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை, அக். 19– நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியொன்றில், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை […]

Loading

செய்திகள்

திருச்செந்தூரில் கடல் 100 அடி உள்வாங்கியது

திருச்செந்தூர், அக். 19– திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பொதுவாக அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற கனத்த நாட்களில் திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கும். மேலும் சீற்றத்துடனும் காணப்படும். குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், அதற்கு முந்தைய […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் 22, 23–ந் தேதிகளில் கனமழை: ஆரஞ்ச் எச்சரிக்கை

சென்னை, அக்.19– தமிழ்நாட்டில் 22, 23–ந் தேதிகளில் கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் நிகழ்வு 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உருவாகும் என சொல்லப்பட்டிருந்தது. அதாவது தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் ஆகியவற்றை நிகழ்வுகள் என்று குறிப்பிடப்படுகிறது. இது நல்ல மழையை கொடுக்கும். அந்த வகையில் 24-ந்தேதி வங்கக்கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி, முன்கூட்டியே 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடலில் […]

Loading

செய்திகள்

அமெரிக்கா முழுவதும் அதிபர் டிரம்ப் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம்

வாஷிங்டன்: அக்.19அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றபோது, அரசின் பொருளாதார கொள்கைகளில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அரசு செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளும், வெளிநாடுகள் அமெரிக்க தயாரிப்புகளுக்கு விதிக்கும் வரிக்கு இணையான வரிகளை அமெரிக்காவும் விதிப்பதையும் அவர் அறிவித்தார். அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் […]

Loading

செய்திகள்

ஒரு சவரன் தங்கம் ரூ.95 ஆயிரத்தை கடந்தது

சென்னை, அக்.16– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 11,860 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 94,880 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 […]

Loading