செய்திகள்

மலேசியாவில் உற்சாக வரவேற்பு: நடனக் கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடினார்

கோலாலம்பூர், அக். 26– மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். இந்த நிலையில் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். மலேசியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். முன்னதாக கம்போடியா–தாய்லாந்து இடையேயான […]

Loading

செய்திகள்

தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் வாபஸ்: தி.மு.க. அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது

சென்னை, அக். 26– தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் தி.மு.க. அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப் பெறுவதாக தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது. சமூகநீதியை படுகொலை செய்யும் செயலுக்கு எதிராக பா.ம.க. […]

Loading

செய்திகள்

அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி தீவிரம்

சென்னை, அக்.25– அடையாறு ஆற்றின் முக துவாரத்தில் உள்ள மண் படுகைகளை வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறையினரால் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை தூர்வாரி அகலப்படுத்தப்பட்டு வருகிறது. முகத்துவாரம் மண் படுகையினால் மூடப்படும் நிகழ்வானது கடல் அலைகளினால் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகும். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமானதால் முதலமைச்சர் நேற்று (24–ந் தேதி) அடையாறு முக துவாரத்திற்கு திடீராய்வு மேற்கொண்டு நீர்வளத்துறையினரால் 3 பொக்லைன் கொண்டு தூர்வாரப்படும் அடையாறு […]

Loading

செய்திகள்

தீவிர புயலாக வலுப்பெறும் ‘மோன்தா’ புயல்

சென்னை, அக். 25– வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை 28ம் தேதி தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழையின் முதல் நிகழ்வு வங்கக்கடலில் உருவாகி, வடமாவட்டங்களில் சில இடங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை […]

Loading

செய்திகள்

மரத்தில் கார் மோதி விபத்து: பிறந்தநாள் கொண்டாட சென்ற நண்பர்கள் 4 பேர் பலி

கோவை, அக். 25– கோவை சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பிறந்தநாள் கொண்டாட காரில் சென்ற நண்பர்கள் 4 பேர் பலியானார்கள். கோவை மாவட்டம் பேரூர் அருகே செட்டிபாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் நேற்று நள்ளிரவு ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டு இருந்தது. அந்த காரில் நண்பர்கள் 5 பேர் பயணம் செய்தனர். அங்குள்ள ஒரு வளைவில் கார் திரும்ப முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு: ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை

சென்னை, அக். 25– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வருகிறது. கடந்த 17-ம் தேதி அதிகபட்சமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனையானது. அதன் பிறகு சிறிய அளவில் குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் ஆபரண தங்கம் கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு 65 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர், அக். 24– மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 65,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 5வது நாளாக 120 அடியாக உள்ளது. கர்னாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பு […]

Loading

செய்திகள்

27–ந் தேதி உருவாகிறது ‘மோன்தா’ புயல்

சென்னை, அக்.24– 27–ந் தேதி (திங்கட்கிழமை) வங்கக்கடலில் புதிய புயல் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மோன்தா’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:– தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று புதிய காற்றழுத்த […]

Loading

செய்திகள்

ஆந்திராவில் பஸ்சில் பயங்கர தீ; 25 பயணிகள் பரிதாப பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

கர்னூல், அக். 24– ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் இன்று அதிகாலை பஸ் தீப்பற்றிய சம்பவத்தில் பயணிகள் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திரா மாநிலம் கர்னூலில் பயணிகள் 42 பேருடன் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த இந்த பஸ் ஆந்திர மாநிலம் கர்னூலில் […]

Loading

செய்திகள்

ரஷ்யா தாக்கப்பட்டால் கடும் பதிலடி: அமெரிக்காவுக்கு புதின் எச்சரிக்கை

மாஸ்கோ, அக். 24– உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதலாக பொருளாதார தடைகளை விதித்துள்ளார். ரஷ்யாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் புதின் கடும் கோபமடைந்துள்ளார். மேலும் டிரம்பின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் என்று கூறிய புதின் அவரது பொருளாதார தடைகளை கடுமையாக கண்டித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், டிரம்ப் பேசி வருகிறார். அதில் இன்னும் […]

Loading