செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

சென்னை, அக். 27– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ. 91 ஆயிரத்து 600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால் கடந்த ஒரு வாரமாக, நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை), தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 11,500 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 92,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி […]

Loading

செய்திகள்

அதானி குழுமத்தில் முதலீடு: எல்.ஐ.சி. விளக்கம்

புதுடெல்லி, அக்.27- அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் முதலீடு செய்த முடிவுக்கு வெளிநபர்கள் தலையீடுதான் காரணம் என்று அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட செய்திக்கு எல்.ஐ.சி. மறுப்பு தெரிவித்துள்ளது. பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் அண்ட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நாட்டின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. கடந்த மே மாதத்தில் 57 கோடி டாலர் (ரூ.5 ஆயிரம் கோடி) முதலீடு செய்தது. இதுபற்றி சமீபத்தில் அமெரிக்க பத்திரிகையான ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி […]

Loading

செய்திகள்

திருவான்மியூரில் போதைப் பொருள் பதுக்கல்: 2 பேர் கைது

சென்னை, அக். 27– சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் திருவான்மியூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து திருவான்மியூர், காமராஜர் நகர் அருகே கண்காணித்து, மாத்திரைகள் கஞ்சா ஆயில் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த சாந்தனு (39 என்பவரை கைது செய்தனர். மேலும் சாந்தனுக்கு கஞ்சா ஆயில் சப்ளை செய்த பிராங்ளின் […]

Loading

செய்திகள்

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு விதிகளை வகுக்க 10 நாள் அவகாசம்

தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு சென்னை, அக். 27– அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு 10 நாள் அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27–ந் தேதி தவெக பிரசார கூட்டத்தில், அதன் தலைவர் விஜய் பேசியபோது, நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் குறுகிய தெருக்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், […]

Loading

செய்திகள்

பா.ஜ.க. – எடப்பாடி தப்புக்கணக்கு: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, அக்.26– மக்கள் வாக்குரிமையை பறித்து தேர்தலில் வெற்றி பெறலாம் என பா.ஜ.க. – எடப்பாடி தப்புக்கணக்கு போடுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது:– 2018-–ம் ஆண்டு கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அப்போது ஆட்சியிலிருந்த அண்ணா தி.மு.க.வின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் சாவகாசமாகக் களத்திற்கு வந்த நிலையிலும், எதிர்க்கட்சியான தி.மு.க.தான் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், பொழுது விடிவதற்கு முன்பாகவே களமிறங்கி […]

Loading

செய்திகள்

முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் ஸ்டாலின்: எடப்பாடி கடும் தாக்கு

சென்னை, அக்.28– எதற்காக முதலமைச்சரானோம் என்பதை மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:– நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.திரைப்படங்களைப் பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை […]

Loading

செய்திகள்

தாய்லாந்து – கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தம்: டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து

கோலாலம்பூர், அக். 26– அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. கடந்த ஜூலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லை பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. பல ஆண்டுகள் இல்லாத வகையில், இம்மோதலில் பலர் கொல்லப்பட்டனர். மேலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர். இதையடுத்து, இம்மோதலை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் […]

Loading

செய்திகள்

8 கி.மீ வேகத்தில் நகர்கிறது: இன்றே உருவாகிறது ‘மோன்தா’ புயல்

சென்னை, அக். 26– வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக (மோன்தா) வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5.30 மணிக்கு மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Loading

செய்திகள்

அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் நிச்சயம் அதிபராக பதவி ஏற்பார்: கமலா ஹாரிஸ்

வாஷிங்டன், அக். 26– அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் நிச்சயம் அதிபராக பதவி ஏற்பார் என தான் எதிர்பார்ப்பதாக ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். சமீபத்தில் சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்போதைய அதிபர் ஜோ பிடன் பாதியில் விலகிய நிலையில் […]

Loading

செய்திகள்

கோவையில் ரெயிலைக் கவிழ்க்க சதி: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை, அக். 26– கோவையில் ரெயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளது. இங்கு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர் செல்ல பெரும்பாலும் ரெயில்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக கோவையில இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 22–ந்தேதி கோவையில் இருந்து இருகூர் வழியாக […]

Loading