வேலூர், டிச. 24–
வேலூர் நாயாயணி பீடம் மற்றும் தங்க கோயிலை நிறுவிய ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10,008 மகளிருக்கு வஸ்தர தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சக்தி அம்மா பங்கேற்று அனைத்து மகளிரையும் ஆசீர்வதித்து புடவைகளையும் வழங்கினார். கலவை சச்சுதாநந்த சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து அவரைக் கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் நாராயணி மருத்துவமனை இயக்குனர் என்.பாலாஜி, தங்கக் கோயில் இயக்குனர் சுரேஷ்பாபு, அறங்காவலர் செளந்தர், பீடத்தின் மேலாளர் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.
![]()





