செய்திகள்

விஜயின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? — தவெக இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்

Makkal Kural Official

சென்னை, நவ. 5:

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் ஒரு மாத காலம் மந்தமாக இருந்தன. இப்போது, அந்த அமைதி முறிந்து கட்சிச் செயல்பாடுகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு கட்சித் தலைவர் விஜய் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் கலந்து கொள்ள, 2,000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அழைப்பு கடிதம் அல்லது அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரங்கிற்குள் நுழைவு அனுமதி வழங்கப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு பொதுக்குழுவில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொகுதி அடிப்படையிலான அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் கட்சித் தளவாடம் குறித்த விவாதங்கள் நடைபெறவுள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில் தவெக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து இது கட்சியின் முக்கியமான இரண்டாவது பெரிய கலந்தாய்வாகும். துயரமான கரூர் நிகழ்வுக்குப் பிறகு விஜய் மற்றும் தவெக தலைமையின் அடுத்த கட்ட அரசியல் நடைமுறைகளுக்கு இந்தக் கூட்டம் திசை காட்டும் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *