செய்திகள்

வரி வருவாயைப் பெருக்குவதில் கவனம் செலுத்துங்கள்: ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே ப.சிதம்பரம் அறிக்கை

Makkal Kural Official

சென்னை, ஜன. 4:

சொந்த வரி வருவாயை பெருக்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முழுவிவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு; ஆனால் நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே.

தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் 21–22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும் என்பது கணிப்பு. சொந்த வரி வருவாயைப் பெருக்குவதில் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும்.

திட்டச் செலவுகளில் மதிப்பீட்டை மிகாமல் பணிகளை முடிக்க வேண்டும். சிக்கனம் முக்கியம். செம்மையான நிதி மேலாண்மையை அரசின் தாரக மந்திரமாக அரசின் எல்லாத் துறைகளும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *