சென்னை, டிச. 15:
இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு.வி.க. நகர் மண்டலத்தில் நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டும் பணியினை இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். 750 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் பல்நோக்கு மையக் கட்டடம் இது.
இந்நிகழ்வின் போது, மேயர் ஆர்.பிரியா, மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், நியமன குழு உறுப்பினர் சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ஸ்ரீதர், சுமதி, புனிதவதி எத்திராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





