செய்திகள்

முத்தியால்பேட்டையில் பைக் திருட்டு: 2 பேர் கைது

Makkal Kural Official

சென்னை, ஆக. 5–

சென்னை மண்ணடி, புது தெருவில் வசித்து வரும் நெப்போலியன் தனது இருசக்கர வாகனத்தை அவரது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, வெளியூர் சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து, அந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற ஹரிகரன் என்பவரை கைது செய்தனர். மேலும், விசாரணையில் அவரது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மேற்படி இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து புகார்தாரரின் இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *