செய்திகள்

மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு: ட்ரோன் கேமராக்கள் பறக்கத் தடை சென்னை காவல்துறை அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, ஜன. 21–

பிரதமர் நரேந்திர மோடி 23–ந் தேதி தமிழகம் வரவுள்ளதையொட்டி சென்னையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தேர்​தல் பிரச்​சார பொதுக்​கூட்​டம் செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகத்​தில் வரும் 23-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இதில் பிரதமர் நரேந்​திரமோடி உரை​யாற்​றவுள்​ளார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்சி தலை​வர்​கள் பங்​கேற்​க​வுள்​ளனர். இதற்​காக பிரதமர் திரு​வனந்​த​புரத்​தில் இருந்து வரும் 23-ம் தேதி பகல் 1.15 மணிக்கு தனி விமானத்​தில் புறப்​பட்​டு, நண்​பகல் 2.15 மணிக்கு சென்னை பழைய விமான நிலை​யம் வரு​கிறார். அங்​கிருந்து ஹெலி​காப்​டரில் பகல் 2.25 மணிக்கு புறப்​பட்​டு, மாலை 3 மணிக்கு மது​ராந்​தகம் பொதுக்​கூட்ட திடலுக்கு செல்​கிறார். மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​கும் பிரதமர் மாலை 4.30 மணிக்கு அங்​கிருந்து ஹெலி​காப்​டரில் புறப்​பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலை​யம் வரு​கிறார்.

அங்​கிருந்து மாலை 5.05 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்​லிக்கு புறப்​படு​கிறார். பிரதமரின் வரு​கையையொட்டி டெல்​லி​யில் இருந்து சிறப்பு பாது​காப்​புப் படை (எஸ்​பிஜி) ஏஐஜி அமி சந்த் யாதவ் தலை​மையி​லான குழு​வினர் சென்னை விமான நிலை​யம் வந்​துள்​ளனர். நேற்று அந்த குழு​வினர், விமான நிலை​யத்​தில் பிரதமரின் பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து ஆய்​வுக் கூட்​டத்தை நடத்​தினர். அந்த கூட்​டத்​தில் சென்னை மாநகர போலீஸ், மத்​திய தொழில் பாது​காப்​புப் படை, மாவட்ட வரு​வாய்துறை, சென்னை விமான நிலைய உயர் அதி​காரி​கள், மத்​திய, மாநில உளவுப் பிரி​வினர், முக்​கிய பிர​முகரின் பாது​காப்பு அதி​காரி​கள், மருத்​து​வம் மற்​றும் தீயணைப்​புத் துறை அதி​காரி​கள் கலந்து கொண்​டனர்.

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய இடங்கள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

23–ந் தேதி பிரதமர் சென்னைக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசு ஏற்பாடுகளைத் தவிர, அந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், 2023 ஆம் ஆண்டு, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 163ன் கீழும், 2023 ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 14ன் உட்பிரிவு (2) கீழும், ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராஃப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட 21.12.2025 முதல் 18.02.2026, வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்று சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறி்க்கையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *