பொன்னேரி டிச-30
சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநரகம் இணைந்து தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மை திட்டத்தின் நிதியுதவியுடன் தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கால்நடை வளர்ப்பு மூலம் மேம்படுத்தும் திட்டம் நடைபெற்றது.
இதில் தத்தைமஞ்சி லட்சுமி அம்மன் நகர், மெதூர் முல்லை நகர், பழவேற்காடு- குளத்துமேடு, ஆரணி-பாலவாக்கம் ஜெ.ஜெ.நகர், தோணிரேவு உள்ளிட்ட கிராமப்புறத்தில் வசிக்கும் 75 பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த நபர்களுக்கு தலா 4 ஆடுகள் வீதம் மொத்தம் 300 ஆடுகள் மற்றும் 50 கிலோ தீவனம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆடுகளை பராமரிக்கும் ஒரு ஆண்டுக்கு மருத்துவ சேவைகளை மருத்துவமனையே இலவசமாக வழங்குகிறது.
இந்த ஆடுகளை செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் இயங்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனை பேராசிரியர் மருத்துவர் ரூபா நந்தினி மற்றும் தத்தைமஞ்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஆகியோர் இதனை வழங்கினர். கள உதவியாளர் துரை, சமூக ஆர்வலர் அகத்தியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
![]()





