சென்னை, ஜன. 9–
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் பங்கேற்றார். விழாவில், பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. முன்னதாக, விழாவுக்கு வந்த கவர்னருக்கு, பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பத்திரிகையாளர் என்.ரவி, சென்னை பாரதீய வித்யா பவன் இயக்குநர் கே.என்.ராமசாமி, கவர்னரின் குடும்பத்தினர், கவர்னர் மாளிகை ஊழியர்கள் மற்றும் நெசவாளர்கள், மீனவர்கள், முன்னாள் ராணுவத்தினர், மூன்றாம் பாலினத்தினர், தமிழ் ஆர்வலர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
![]()





