செய்திகள்

பெங்களூரில் சிறையில் குற்றவாளிகளுக்கு சொகுசு வாழ்க்கை

Makkal Kural Official

பெங்களூரு, நவ. 9–

பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள கொலை, பலாத்​கார, தீவிர​வாத குற்​ற​வாளி​கள் டிவி பார்த்​த​வாறு செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளன.

சொத்​துக்​கு​விப்பு வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட தமிழக முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா, அவரது தோழி சசிகலா ஆகியோ​ரும் பெங்​களூருவை அடுத்​துள்ள பரப்பன அக்​ரஹா​ரா​ சிறையில் அடைக்​கப்​பட்​டிருந்​தனர். அப்​போது சசிகலா சீருடை அணி​யாமல் ஷாப்​பிங் சென்று வரு​வது போன்ற வீடியோ​வும், டிவி, தனி சமையலறை ஆகிய​வற்​றுடன் சொகு​சாக இருப்​பது போன்ற புகைப்​படங்​களும் வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்​களுக்கு முன்பு கொலை வழக்​கில் கைதான கன்னட ந‌டிகர் தர்​ஷன் தனது நண்​பர்​களு​டன் செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ வெளி​யானது.

தற்​போது சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள கொலை தண்​டனை கைதி உமேஷ் ரெட்டி 2 செல்​போன்​களை கையில் வைத்​துக்​கொண்டு பேசுவது போன்ற வீடியோ வெளி​யாகி​யுள்​ளது. 1997ம் ஆண்டு முதல் 2022ம் வரை 20 பெண்​களை பலாத்​காரம் செய்​து, அதில் 18 பேரை கொலை செய்​த​தாக உமேஷ் ரெட்டி மீது வழக்குகள் நிலு​வை​யில் உள்​ளன. இதில் ஒரு சில வழக்​கு​களில் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்ட இவர், பரப்பன அக்​ரஹாரா சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ளார்.

அதே​போல 19 கிலோ தங்க கடத்​தல் வழக்​கில் கைதான தருண் ராஜ், தனது அறை​யில் சோ​பா​வில் அமர்ந்து டிவி பார்ப்​பது போன்ற புகைப்​படம் வெளி​யாகி​யுள்​ளது. இதுத​விர ஐஎஸ் தீவிர​வாத அமைப்​புக்கு ஆள் சேர்த்​த​தாக கைதான ஜுஹாப் ஹமீத் ஷக்​கீல் செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ வெளி​யாகியுள்​ளது.

இவ்வாறு சிறையில் உள்ள பல்வேறு குற்றவாளிகளும் செல்​போனில் பேசுவது போன்ற புகைப்​படங்​களும் கன்னட ஊடகங்​களில் வெளி​யாகி சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளன. இதுகுறித்து விசாரித்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *