செய்திகள்

புதுச்சேரியில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு

Makkal Kural Official

புதுச்சேரி, டிச. 10–

புதுச்சேரியில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக ரங்கசாமி இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி அரசு ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பச்சரிசி, நாட்டு சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *