BRICS
செய்திகள்

‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Makkal Kural Official

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 6–

‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கானா, டிரினிடாட் அண்ட டுபாகோ, அர்ஜென்டினா நாடுகளை தொடர்ந்து 4வது நாடாக, பிரேசிலுக்கு, அந்நாட்டு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு, ​​இந்திய புலம் பெயர்ந்தோர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாசார நடனத்தை நடத்தினர். மோடி 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

‘17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின் பேரில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு செல்கிறேன். இந்த பயணத்தில் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

பிரேசில் நாட்டுக்கான பயணம் முடிந்ததும் இறுதியாக நமீபியா நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முன்னதாக கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவித்தனர்.

இதன்பின் அர்ஜென்டினாவுக்கு புறப்பட்டு சென்றார். அந்நாட்டின் எஜீஜா சர்வதேச விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 57 ஆண்டுகளில் இந்திய பிரதமரின் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். அவருடைய வருகையை முன்னிட்டு இந்திய சமூகத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *