தியான்ஜின், செப்.1-–
பிரிக்ஸ் நாடுகள் மீதான பாரபட்சமான பொருளாதார தடை ணகளை எதிர்ப்போம் என ரஷ்ய அதிபர் புதின் உறுதிபட தெரிவித்தார்.
இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டி வருகிறார். இந்த நாடுகள் மீது 10 சதவீத வரி விதிக்கப்போவதாக அவர் அறிவித்து இருந்தார். டிரம்பின் இந்த தடைகளை ரஷ்யாவும், சீனாவும் இணைந்து எதிர்க்கப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் கூறினார்.
சீனா செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் இது குறித்து கூறியதாவது:-
முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் வளங்களைத் திரட்டுவதில் ரஷ்யாவும், சீனாவும் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் பிரிக்ஸ் திறனை வலுப்படுத்துவதிலும் ஒற்றுமையாக நிற்கின்றன.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மற்றும் உலகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் பாரபட்சமான தடைகளுக்கு எதிராக சீனாவும், ரஷ்யாவும் ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. அதன்படி இந்த தடைகளை ஒன்றுசேர்ந்து எதிர்ப்போம்.
சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி சீர்திருத்தத்துக்கு ரஷ்யாவும், சீனாவும் ஆதரவு அளிக்கின்றன. வெளிப்படைத்தன்மை மற்றும் உண்மையான சமத்துவம் என்ற கொள்கைகளில் இயங்கக்கூடிய ஒரு புதிய நிதி அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அதன் மூலம் அனைத்து நாடு களுக்கும் சமமான மற்றும் பாகு பாடற்ற அணுகலை வழங்கவும், உலகப் பொருளாதாரத்தில் உறுப்பு நாடுகளின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவும் முடியும்.
அனைத்து மனிதகுலத்தின் நலனுக்கான முன்னேற்றத்தையே நாங்கள் நாடுகிறோம். இந்த உன்னத இலக்கை நோக்கி ரஷ்யாவும் சீனாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும். நமது சிறந்த நாடுகளின் செழிப்பை உறுதி செய்வதற்கான நமது முயற்சிகளை ஒருங்கிணைப்பாளர்கள் என்றும் நம்புகிறேன்.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு 10 உறுப்பினர்களை கொண்ட அமைப்புக்கு சக்தி வாய்ந்த புதிய உத்வேகத்தை அளிக்கும். மேலும் சமகால சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும். மேலும் பகிரப்பட்ட யூரேசிய விண்வெளியில் ஒற்றுமையை ஒருங்கிணைக்கும்.
இவை அனைத்தும் ஒரு நியாயமான பன்முக உலக ஒழுங்கை வடிவமைக்க உதவும் என நம்புகிறேன்.
இவ்வாறு புதின் கூறினார்.
![]()




