திருவெற்றியூர் மாநகரப் பேருந்து நடத்துநர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜா கடையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 54). சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் வரை தடம் எண் 56சி பேருந்தில், ஓட்டுநர் பாண்டியனும் ரமேஷும் காலை 6 மணியளவில் பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த நிலையில் திடீரென ரமேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை திருவொற்றியூர் உள்ள ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டத்தையடுத்து, பின்னர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.நடத்துநர் ரமேஷ் உயிரிழப்பு குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Makkal Kural Officialபுதுடெல்லி, ஆக. 20– துணை ஜனாதிபதி தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்திய நாட்டின் 14 வது துணை ஜனாதிபதியான ஜகதீப் தன்கர், பதவிக்காலம் நிறைவடைய 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியிலிருந்து விலகினார். இந்த நிலையில் அந்த துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக செப்டம்பர் […]
Makkal Kural Officialசென்னை: பொங்கல் திருநாளில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழகமுதலமைச்சர் ஸ்டாலின். வடகிழக்குப் பருவமழை, டிட்வா புயலால் 1.39 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டநிலையில், பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத் தொகையை செலுத்தும்வகையில், ரூபாய் 111.96 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை மற்றும் டிட்வா புயலின் காரணமாக 33%-க்கு மேல் பயிர்சேதம் ஏற்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஒரு ஹெக்டேருக்கு ₹20,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின்அறிவித்தார். பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 84,848 விவசாயிகள்பயன் பெறும் வகையில் நிவாரணத் தொகையாக ரூ 111.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-2026 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவத்தில்பெய்த கனமழை மற்றும் டிட்வா புயலின் காரணமாக 1.39 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண்மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின்வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 01.12.25 அன்று ஆய்வு கூட்டம்நடத்தி பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் கணக்கெடுப்பு நெல் பணி உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாகஹெக்டேருக்கு ரூ. 20,000 ஆகவும் வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில்மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது. டிட்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால்பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணைஇன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழை மற்றும்2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்தவேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு 3.60 லட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில்ரூ.289.63 கோடி நிவாரணத்தொகை 2025 டிசம்பர் மாதம் ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அஉத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டு நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில்நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. Related posts: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவத்சவா பதவி ஏற்பு: கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் தங்கம் விலை இன்று சவரன் ரூ.90 ஆயிரத்தை நெருங்கியது Views: 58
Makkal Kural Officialசென்னை, டிச. 3– ஐயப்ப பக்தர்கள் ரெயில்களில் கற்பூரம் ஏற்றக்கூடாது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலைக்கான வருடாந்திர யாத்திரை சீசனில் ஐயப்ப பக்தர்கள் தங்களது பயணக் காலத்தில் பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களைப் பாதுகாப்பதே இந்த வேண்டுகோளின் நோக்கம் ஆகும். ரயில் பெட்டிகளுக்குள் கற்பூரம் ஏற்றுவது ஒரு கடுமையான தீ அபாயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஒரு சிறிய […]