புதுடெல்லி, நவ. 14–
நேருவின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் சோனியா மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள சாந்தி வனத்திலுள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அங்கு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நேருவின் நினைவிடத்தில் இன்று சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். அவர்களுடன் மாநிலங்களவை துணை தலைவர் கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் நேருவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
![]()





