செய்திகள்

திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் தீ விபத்து; ரெயில் சேவைகள் பாதிப்பு

Makkal Kural Official

திருவள்ளூர், ஜூலை 13-

திருவள்ளூர் அருகே இன்று அதிகாலை டீசல் ஏற்றிய சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ரெயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

இன்று காலை 5:30 மணியளவில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே டீசல் நிரப்பப்பட்ட சரக்கு ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதுடன், அதில் ஏற்பட்ட டீசல் கசிவால் தீ பற்றியது. தீ நான்கு முதல் ஐந்து பெட்டிகள் வரை பரவிய நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக, சென்னை – ஆரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தீயணைப்பு மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.

அருகிலிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், மேலும் தீ பரவாத பெட்டிகள் உடனே துண்டிக்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் கண்டறிய உயர் மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இடைவெளி பிழை அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்தால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *