சென்னை 23:
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
![]()





