சென்னை, ஜன.26–
‘அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம்’ என தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் – நடிகர் விஜய் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ‘வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியக் குடியரசு உருவாகக் காரணமான அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுவோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான குடியரசு நாளில், அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம். அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.
![]()





