எந்த தந்தையும் செய்ய துணியாத காரியம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பூட்டிய வீட்டுக்குள் காதலனுடன் தனிமையில் இருந்த மகளையும், அவரது காதலனையும், பெண்ணின் தந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்திருக்கிறார். பெண்ணின் தந்தை ஒரு கொத்தனார் ஆவார். அவரது மகளுக்கு 17 வயது தான் ஆகிறது. அந்த இளம் பெண் ஒருவரை காதலித்துள்ளார். தந்தை வெளியூர் சென்ற நேரத்தில் காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தந்தை வந்ததால் இருவரும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.
பருவ வயதில் சில குழந்தைகள் தவறான வழிகளை தேடுகிறார்கள். காதல் என்ற பெயரில் பருவ வயதை எட்டாத பெண்கள், வழிதவறிப்போகிறார்கள். சிலர் திருமணம் செய்யப்போகும் காதலன் தானே என்று நினைத்து எல்லை மீறுகிறார்கள். இருவருக்குமே வயது 18க்குள் தான் இருக்கும் என்கிற நிலையில், வாழ்க்கையை பற்றி சரியான புரிதலே இருக்காது. இருவருமே வயது கோளாறில் தவறு செய்கிறார்கள்.
![]()





