செய்திகள்

ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்ட வழக்கு: நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு

Makkal Kural Official

சென்னை, ஆக. 27–

கேரளாவில் ஐ.டி. ஊழியர் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருந்த நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2011ஆம் ஆண்டு வினயன் இயக்கிய ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதன் பிறகு கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், றெக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மதுபான பாரில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்டதாகவும், கடத்தப்பட்டதாகவும், நடிகை லட்சுமி மேனன் அக்கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்றும் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து ஐடி ஊழியரை கடத்திய கும்பலைச் சேர்ந்த மிதுன், அனீஷ் மற்றும் சோனா மோல் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நடிகை லட்சுமி மேனனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இத்தகவலை அறிந்து லட்சுமி மேனன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *