மஸ்கட், ஜன. 21:
இந்திய கடற்படை பாய்மரக் கப்பல் ஐஎன்எஸ்வி கவுண்டின்யா மஸ்கட்டை வந்தடைந்தது. போர்பந்தரில் இருந்து தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு, இந்தியா மற்றும் ஓமன் நாடுகளின் பகிரப்பட்ட கடல்சார் பாரம்பரியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தை இது குறிக்கிறது என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால் பெருமிதத்தோடு கூறினார்.
கப்பலையும் அதன் குழுவினரையும் மஸ்கட்டில் உள்ள சுல்தான் கபூஸ் துறைமுகத்தில் வரவேற்றார்.
பாரம்பரியமாக கட்டமைக்கப்பட்ட இந்த பாய்மரக் கப்பலின் பயணம், 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய கடல்சார், கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளை எடுத்துக்காட்டுகிறது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையில் நீடித்த தொடர்புகளை செயல்படுத்திய இணைப்பு வழித்தடங்களாக கடல்களின் பங்கையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரு நாடுகளும் 70 ஆண்டுகால ராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் இந்த பயணம் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், “இந்த நிகழ்வு ஒரு பயணத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஆழமான வேரூன்றிய நாகரிக பிணைப்பையும் கொண்டாடுகிறது. கப்பலின் வருகை, காலத்தின் சோதனையாக நிற்கும் நீடித்த இந்தியா-ஓமன் நட்பின் அடையாளமாகும், இது வரலாற்றில் நங்கூரமிடப்பட்டு, வர்த்தகத்தால் வளப்படுத்தப்பட்டு, பரஸ்பர மரியாதையால் வலுப்படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.
ஐ.என்.எஸ்.வி. கவுண்டின்யா. பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு. இந்தியாவின் பண்டைய கப்பல் கட்டும் வழிவத்துவத்தை மீட்டெடுத்து, அதை உலகிற்கு பெருமையுடன் வழங்குவதே அவரது உறுதி. புகழ்பெற்ற இந்திய மாலுமி கவுண்டின்யாவின் பெயரிடப்பட்ட இந்த கப்பல், இந்தியாவின் உள்நாட்டு கடல்சார் அறிவு, கைவினைத்திறன் மற்றும் நிலையான கப்பல் கட்டும் நடைமுறைகளை வெளிப்படுத்துகிறது என்றும் கூறினார்.
இந்த திட்டம் பிரதமர் மோடியால் கற்பனை திட்டமிடப்பட்டு, கடற்படை தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பாரம்பரிய கப்பல் கட்டும் வடிவமைப்பாளர்கள் மற்றும் தலைசிறந்த கப்பல் வடிவமைப்பாளர்கள் ஆதரவுடன் இந்திய கடற்படையால் செயல்படுத்தப்பட்டது’’ என்பதை பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
அஜந்தா குகை ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கப்பலால் ஈர்க்கப்பட்டு, INSV கவுண்டின்யா, நவீன ஆணிகளோ அல்லது உலோகக் கட்டுகளோ இல்லாமல் தைக்கப்பட்ட பலகை கட்டுமானம் உட்பட பண்டைய இந்திய கப்பல் கட்டும் நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டது’’ என்று அதன் சிறப்புகளை விளக்கினார்.
துறைமுகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு விழாவில், ஓமன் பாரம்பரியம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் சுற்றுலாத் துணைச் செயலாளர் அஸ்ஸான் அல் புசைடி, இந்திய கடற்படை, ஓமன் ராயல் கடற்படை, ஓமன் ராயல் போலீஸ் கடலோர காவல்படை மற்றும் பிற அமைச்சகங்களின் மூத்த பிரமுகர்களுடன் கலந்து கொண்டனர். மாணவர்கள் உட்பட அனைத்துத் துறைகளிலிருந்தும் ஏராளமான இந்திய சமூகத்தினர் கப்பலை உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் – அதிகாரிகளுடன் பரஸ்பர கடல்சார் வர்த்தக உறவுகள் குறித்து விவாதித்தனர்.
![]()





