செய்திகள்

இண்டர்னெட் சேவை இல்லாமல் உரையாடும் புதிய செயலி

Makkal Kural Official

எக்ஸ் இணை நிறுவனர் அறிமுகம்

நியூயார்க், ஜூலை 15–

இணைய சேவை இல்லாமல் உரையாடும் (CHAT) வகையில் “BITCHAT” என்ற புதிய செயலியை ட்விட்டர் வலைதளத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்ஸி அறிமுகம் செய்துள்ளார்.

டுவிட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் இணையம் இல்லாமல் ஆஃப்லைனில் செயல்படும் ‘பிட்சாட்’ (BITCHAT) என்ற புதிய செய்தியிடல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த செயலி, இணையம் (Network), வைஃபை (WiFi) அல்லது மொபைல் நெட்வொர்க் தேவையில்லாமல் புளூடூத் மெஷ் நெட்வொர்க்கிங் (BLE) வழியாக செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது. மேலும், ‘பிட்சாட்’ பயன்பாட்டில், பயனர்களுக்கு தொலைபேசி எண்ணோ அல்லது அக்கவுண்டோ தேவையில்லை. இந்த பயன்பாடு முற்றிலும் சாதனத்திலிருந்து சாதனத்திற்கு இடையிலான தொடர்பை அடிப்படையாகக் கொண்டது.

தற்போது ஐபோனில் கிடைக்கும்

தனியுரிமையை மையமாகக் கொண்டு, ஐபோன் பயனர்கள் தற்போது இந்த செய்தியிடலை டெஸ்ட் ஃப்ளைட் பயன்முறையில் பயன்படுத்தலாம். மேலும் டோர்சி GitHub இல் உள்ள கட்டமைப்பை விவரிக்கும் தொழில்நுட்ப வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். பிட்சாட் (Bitchat) செயலி பேரிடர் மீட்பு, போராட்டங்கள், தொலைதூர பகுதிகள் மற்றும் தனியுரிமையை விரும்பும் பயனர்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிட்சாட்டை பயன்படுத்த பயனர்களுக்கு மின்னஞ்சல், தொலைபேசி எண் அல்லது கணக்கு தேவையில்லை. செய்திகள் எண்டு-டு-எண்டு குறியாக்கம் (end-to-end encryption) செய்யப்பட்டு, பயனர்களின் சாதனங்களில் மட்டுமே தற்காலிகமாக சேமிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு செய்திகள் தானாக அழிக்கப்படுகின்றன. இதனால், புளூடூத்தின் வழக்கமான 30 மீட்டர் வரம்பைத் தாண்டி, 300 மீட்டர் வரை செய்திகள் பயணிக்க முடியும்.

“ரூம்ஸ்” எனப்படும் குழு அரட்டைகளை உருவாக்கலாம், இவை ஹேஷ்டேக் மூலம் பெயரிடப்பட்டு கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படலாம். மேலும், “ஸ்டோர்-அண்ட்-ஃபார்வர்டு” அம்சம் மூலம் ஆஃப்லைனில் இருக்கும் பயனர்களுக்கு செய்திகள் பின்னர் வழங்கப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *