செய்திகள்

இசையால் எட்டுத்திக்கும் ஆளும் ஏ.ஆர்.ரகுமான்: மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

Makkal Kural Official

சென்னை, ஜன. 6:

இசையால் எட்டுத்திக்கும் ஆளும் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர். ரகுமான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!உங்களது இசையைப் போலவே நீங்களும் என்றும் இளமையோடும் துள்ளலோடும் திகழ்ந்து, தொடர்ந்து சாதனைகளைப் படைத்திட விழைகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *