செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு விண்ணப்பம் வெளியீடு

Makkal Kural Official

சிதம்பரம், நவ. 20–

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி முறையில் 2024-2025 ஆம் ஆண்டில் சேர்க்கைப் பெற்ற மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தல் விபரம் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2024-2025 ஆம் கல்வி ஆண்டில் தொலைதூர மற்றும் இணையவழியில் (CDOE) பயிலும் மாணவர்கள் வருகின்ற டிசம்பர் 2025ல் தேர்வு எழுதுவதற்கான தேர்வுக் கட்டணம் செலுத்த பல்கலைக்கழக இணையவழி (https://annamalaiuniversity.ac.in/aucoe/cdoe_fee.php) 17-11-2025 முதல் செயல்பாட்டில் உள்ளது.

அனைத்து மாணவர்களும் தங்கள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த 03-12-2025 அன்று வரையும் தாமதக் கட்டணத்துடன் (Rs.500/-) 08-12-2025 வரையும் செலுத்தலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், தங்களது தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளுவதனுடன், நுழைவு சீட்டினை 12-12-2025 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக பதிவாளர் இரா. சிங்காரவேலு ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *