செய்திகள் நாடும் நடப்பும்

அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்கள்: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் 2 மாநாடு

Makkal Kural Official

சென்னை,, டிச.18:

சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொடர்பு கணினி பொறியியல் தொழில்நுட்பத்துறை சார்பில் இயந்திர நுண்ணறிவு மற்றும் அடுத்த தலைமுறைகளுக்கான தொழில் நுட்பங்கள் குறித்த 2 நாள் சர்வதேச மாநாடு ஓமன் சுல்தானகத்தின் மஸ்கட் கல்லூரியுடன் இணைந்தது.

பல்கலைக்கழக வளாகத்தில் டிசம்பர் 17 மற்றும் 18 இரண்டு நாள் மாநாடு ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்கள் குழும தலைவர் முனைவர் ஆர். சிவக்குமார் மற்றும் இணை தலைவர் முனைவர் எஸ்.நிரஞ்சன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

மாநாட்டில் வளர்ந்து வரும் ஏ.ஐ அமைப்புகள் மற்றும் கணினி நுண்ணறிவு,கணக்கீட்டு நுண்ணறிவு தடம், இடைநிலை ஒழுங்குமுறை துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பங்கு உள்ளிட்ட ஏராளமான பல்துறை ஆராய்ச்சியை நேரிலும், ஆன்லைனில் வழங்கப்பட்டது,

மாநாட்டிற்கு பல்கலைக்கழக தலைமை இயக்குநர தலைவர் எம். சக்திகணேஷ் முன்னிலை வகித்தார், பல்கலைக்கழக பேராசிரியர், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்,

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *